ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆந்திரா மெஸ் என்ற படத்தில் நடித்து வரும் தேஜஸ்வினி ஒரு சிவில் என்ஜினியர். சிவில் என்ஜினியரிங் படித்து விட்டு இண்ட்டீரியர் டெக்கரேட் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பிரபல சினிமா கம்பெனிகளுக்கு இண்டீரியர் வேலை செய்யும் போது சினிமா பிரபலங்கள் அறிமுகம். அதன் மூலம் மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு தனி ஒருவன் படத்தில் நயன்தாரா தோழியாக நடித்தார். சமீபத்தில் வெளியான அழகு குட்டி செல்லம் படத்தில் ஆடுகளம் நரேனுடன் முக்கிய கேரக்டரில் நடித்தார். தற்போது ஆந்திரா மெஸ் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இனி சிறு சிறு கேரக்டர்களில் நடிக்காமல் ஹீரோயினாகவே தொடர்வது என்று முடிவு செய்திருக்கிறார் தேஜஸ்வினி. பிசியான நடிகை ஆகிவிட்டாலும் இண்ட்டீரியர் டெக்கரேட் நிறுவனத்தையும் தொடர்ந்து நடத்த முடிவு செய்திருக்கிறார்.