மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்புடைய வழக்கில் சிறையில் இருக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நன்னடத்தை அடிப்படையில் பிப்.25ம் தேதி ரிலீஸாக உள்ளார். இதை அம்மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகர் சஞ்சய் தத். கடந்த, 1993ல், மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக, ஏ.கே.56 ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில், நடிகர் சஞ்சய் தத்துக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர், மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள, எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோர்ட் விதித்த தண்டனைப்படி அவர் இந்தாண்டு இறுதியில் சிறையிலிருந்து விடுதலை பெற வேண்டியது.
இந்நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சஞ்சய் தத், தண்டனை காலத்திற்கு முன்பே விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. கடந்தவாரம் கூட அவர் பிப்., 27ம் தேதி ரிலீஸாக இருப்பதாக செய்திகள் வெளியிட்டு இருந்தோம். இந்தச்சூழலில் வருகிற பிப்.25ம் தேதி சஞ்சய் தத் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது. இதை அம்மாநில அரசே உறுதிப்படுத்தி இருக்கிறது.