ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அஞ்சலியையும், சர்ச்சையையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ்த் திரையுலகத்தில் அவருடைய சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தமிழ்நாட்டை விட்டுச் சென்று ஆந்திராவில் அடைக்கலமானார். அதன்பின் அவரைப் பற்றிய எந்த விதமான தகவல்களும் சில மாதங்களுக்கு வெளியாகவில்லை.
தமிழ்ப் படங்களில் நடிப்பதையும் முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார். எப்படியோ கடந்த ஆண்டு 'சகலகலா வல்லவன்' படத்தில் நடிக்க அவரை மீண்டும் அழைத்து வந்தார்கள். அஞ்சலி மீது வழக்குத் தொடுத்திருந்த இயக்குனர் களஞ்சியமும் அதன்பின் எந்த பிரச்சனைகளையும் செய்யாமல் ஒதுங்கிக் கொண்டார். அதன் பின்னணியும் வெளியில் வராமலே அமுங்கிப் போனது.
தற்போது 'இறைவி' படத்தில் நடித்து முடித்துள்ள அஞ்சலி, 'பேரன்பு' படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்துள்ள 'டிக்டேட்டர்' படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனிடையே, அஞ்சலியைப் பற்றிய வதந்தி மீண்டும் டோலிவுட் வட்டாரங்களில் செய்தியாக வர ஆரம்பித்தது.
அவருக்கும் டிவி தொகுப்பாளரான ஓம்கார் என்பவருக்கும் இடையே காதல் என்று அங்கு செய்திகள் வெளியாகின. வழக்கம் போலவே அந்த வதந்தியை அஞ்சலி மறுத்துள்ளார். அவரை நான் இதுவரை சந்தித்தது கூட இல்லை, அப்புறம் எங்கிருந்துதான் இப்படியெல்லாம் வதந்திகள் கிளம்புகிறதோ என அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த வதந்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார். அஞ்சலியைச் சுற்றும் வதந்திகள் இப்போதைக்கு நிற்காது போலிருக்கிறது.