எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா |
தயாரிப்பாளர் சங்க தலைவராக நான் இருந்தபோது என்னுடைய பதவிகாலத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் தேவையில்லாமல் என் மீது பழிசுமத்துகின்றனர். இதுகுறித்து தற்போதைய தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் விசாரித்து உண்மையை நிலை நாட்ட வேண்டும் என்று ராமநாராயணன் கூறியிருக்கிறார்.
சட்டசபை தேர்தலில் தி.மு.க., படு தோல்வியடைந்த பின்னர் தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கதலைவர் பதவியை திடீரென ராமநாரயணன் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததையடுத்து தயாரிப்பாளர் சங்கதலைவர்கள் அவசரக்கூட்டம் கூடியது. அதில் ராமநாரணயன் ரூ.20கோடிக்கு மேல் ஊழல் செய்ததாகவும், திமுக.,வின் கைகூலியாகவும், சங்கத்தை ரவுடிகளின் கூடாரமாகவும் ராமநாரயணன் மாற்றிவிட்டதாகவும் அடுக்கடுக்காக புகார் எழுந்தது. மேலும் புதிய தலைவராக விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரை தேர்ந்தெடுத்தனர்.
இதனிடையே தன்மீதான புகார் அர்த்தமற்றது, நான் எப்பவும் உண்மையாக நடந்து கொண்டுள்ளேன் என்று ராமநாரயணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தயாரிப்பாளர் சங்க தலைவராக நான் ஐந்து வருடங்களாக பணியாற்றி வருகிறேன். என்னுடைய பதவிகாலத்தில் நான் உண்மையாகவும், நேர்மையாவுகம் நடந்து கொண்டேன். இது சங்கத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் தெரியும். 120 சிறு முதலீட்டு படங்களில் பணியாற்றிய நான் எளிமையே வலிமை என்ற உணர்வோடு வாழ்ந்து வருபவன். எந்த காலத்திலும் திரை உலகில் நான் யாருக்கும் பாக்கி வைத்ததில்லை. நேர்மை தவறியதில்லை. இது திரை உலகில் நான் பணியாற்றிய ஏவிஎம், கே. பாலச்சந்தரின் கவிதாலயா போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் தெரியும்.
உத்தமனாக நடந்து கொண்ட என்னை, ரூ.20 கோடி ஊழல் செய்ததாக பொய்யான புகார் கூறியிருக்கின்றனர் முன்னாள் தலைவர்களும் மற்ற உறுப்பினர்களும். வரவு-செலவு கணக்குகளை சங்கத்தின் ஒவ்வொரு மாதமும் ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இதை மினிட்ஸ் புத்தகத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். புதிய தலைவராக பதவியேற்றுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் தான் தீவிர விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.