ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மழையில் தத்தளித்து கொண்டிருக்கும் மக்களுக்கு உதவ நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். சென்னையில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் தலைநகர் சென்னை கடும் சேதத்தை சந்தித்துள்ளது. சென்னை தவிர்த்து காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சினிமா நடிகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் உதவ முன் வந்துள்ளனர். நடிகர் சங்கம் கூட நிதி திரட்டி வருகிறது.
இந்நிலையில் நடிகர், இயக்குநர், நடன அமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட ராகவா லாரன்ஸ் வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதிலும் தான் எப்போது சமூகசேவை ஆர்வத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி கொள்பவர் லாரன்ஸ். தனியாக ஒரு அறக்கட்டளையே நடத்தி அதில் மாற்றுதிறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறார். இந்த தருணத்தில் சென்னை மக்களின் நிலையை கண்டு அவர் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் நிதியுதவி கொடுத்துள்ளார். சினிமாவில் ரஜினியை மானசீக குருவாக ஏற்று கொண்ட லாரன்ஸோ ரூ.1 கோடி நிதியுதவி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையிலேயே உதவும் உள்ளம் கொண்ட ஒரு ரியல் ஹீரோ தான் லாரன்ஸ்!