‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பேய் வேடங்களில் நடிக்க நடிககைள் போட்டி போடும் சீசன் இது. நயன்தாரா முதல் த்ரிஷா வரை முன்னணி நடிகைகளே பேயாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு பேய் வேடங்களில் நடிக்கும் படங்களில் ரோப்பில் தொங்கியபடி ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டும் என்றபோதும் அந்த மாதிரி படங்களே வெற்றி பெறுவதால் ஒவ்வொரு நடிகைகளுமே பேய் கதைகளில் நடிக்க வேண்டும் என்றால் முதல் ஆளாக வந்து நிற்கிறார்கள்.
அந்த வகையில், ஏற்கனவே மாசாணி என்ற படத்தில் பேயாக நடித்தார் இனியா. அந்த படத்தை பத்மராஜா இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப்பிறகு செந்தூரப்பூவே ராம்கி அப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் சுமாரான வெற்றியடைந்த அந்த படத்தின் கதை இனியாவை மையப்படுத்திதான் இருந்தது. முதலில் சாதாரண பெண்ணாக நடித்திருந்த அவர் பின்னர் கொலை செய்யப்பட்டு பேயாக வந்து பழிவாங்கும் கதை.
அந்த படத்தை இயக்கிய பத்மராஜா இப்போது மாசாணியை விட இன்னும் பயங்கரமான ஒரு பேய் கதையை தற்போது யார் செய்துள்ளார். அந்த படத்திற்கு காந்தாரி என்று பெயர் வைத்திருப்பவர், அதில் இனியா நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று அவரிடம் தற்போது கால்சீட் வாங்கியிருக்கிறார். இதுவும் பழிவாங்கும் பேய் கதைதான் என்றாலும், பழிவாங்குவது மிக புதுமையான முறையில் படமாக்கப்படுகிறதாம். கிட்டத்தட்ட காஞ்சனா பாணியில் இந்த காந்தாரி உருவாகிறதாம். இந்த படத்திற்காக இனியாவை எந்தமாதிரி கெட்டப்பில் நடிக்க வைக்கலாம் என்கிற ஆலோசனை தற்போது நடந்து கொண்டிருக்கிறது.