ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் மலையாளத்தில் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா மூவர் நடிப்பில் மல்டி ஸ்டாரர் படமாக வெளியான 'அமர் அக்பர் ஆண்டனி' படம் கிட்டத்தட்ட 3௦ கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்து இன்னும் சில இடங்களில் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது. இந்தப்படத்தை இயக்கியவர் நாடக நடிகராக இருந்து இயக்குனராக புரமோஷன் பெற்ற நாதிர்ஷா. இவர் நடிகர் திலீப்பிற்கு பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்.. ஆனால் தான் இயக்கிய முதல் படத்தில் திலீப்பை நடிக்க வைக்காமல், எதற்காக பிருத்விராஜை ஹீரோவாக்கினார் என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது..
இதையேதான் நாதிர்ஷாவுக்கு வேண்டாத சில நபர்கள், “இது சும்மா காமெடியான கதை, அவரது நண்பர் திலீப்பையே இந்த கதையால் திருப்திப்படுத்த முடியவில்லையே” என பலவாறு சொல்லி பிருத்விராஜை பிரெய்ன் வாஷ் பண்ணி, இந்தப்படத்தை ஒப்புக்கொள்ள விடாமல் தடுத்தார்களாம். ஆனால் பிருத்விராஜ் அவற்றையெல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு இந்தப்படத்தை நம்பிக்கையாக ஒப்புக்கொண்டாராம். இந்தப்படத்தில் திலீப்பை நடிக்க வைக்காததற்கு காரணம், படத்தில் அவருக்கு ஏற்றார்போல கேரக்டர் இல்லை என்பதுதானாம். இதை திலீப்பும் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளார் என்பதுதான் படத்தின் வெற்றிக்கு அவர் சொன்ன வாழ்த்து என்கிறார் இயக்குனர் நாதிர்ஷா.