ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் விக்ரம் பிரபுவுடன் 'வீர சிவாஜி' படத்தில் ஜோடியாக அறிமுகமான கையோடு, மலையாளத்தில் குஞ்சாக்கோ போபனுடனும் ஜோடியாக நடித்து வருகிறார் (பேபி) ஷாமிலி. 25 வருடங்களுக்கு முன் மீனாவுடன் எஜமான் படத்தில் ஜோடியாக நடித்தபோது ரஜினிக்கு என்ன டென்ஷன் இருந்திருக்குமோ அதுதான், 'வள்ளியும் தெட்டி புள்ளியும் தெட்டி' படத்தில் தனக்கு ஜோடியாக பேபி ஷாமிலி நடிக்கப்போகிறார் என்றதும் குஞ்சாக்கோ போபனுக்கும ஏற்பட்டது. வேறென்ன..? ஷாமிலி தன்னை எப்படி அழைக்கப்போகிறார் என்கிற பயம் தான்.
காரணம் 17 வருடங்களுக்கு முன் ஷாமிலியின் அக்காவான ஷாலினியுடன் ஜோடியாக குஞ்சாக்கோ நடித்தபோது, அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கூடவே வரும் ஷாமிலி, அவரை அங்கிள் என்றுதான் அழைப்பாராம். அதேபோல இப்போதும் தன்னை 'அங்கிள்' என்று அழைத்து தன்னை வயதனான ஆளாக்கி விடுவாரோ என்று கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருந்தாராம். ஆனால் நல்லவேளையாக ஷாலினி எப்படி அழைத்தாரோ, அதேபோல இவரும் சைக்கோ என்றும் சாக்கோச்சன் என்றும் அழித்தபின் நிம்மதி பெருமூச்சு விட்டாராம் குஞ்சாக்கோ.