ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். அந்த இரண்டு படங்களுமே ஹிட்டானது. முதல் படம் விஜயசேதுபதிக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது போன்று இரண்டாவது படம் அப்படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அதோடு தேசிய விருதினையும் வாங்கிக்கொடுத்தது. இதனால் கார்த்திக் சுப்புராஜ் மீது திரையுலகில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உருவானது. முன்னணி ஹீரோக்களே அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது இறைவி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவரது முதல் இரண்டு படங்களிலும் நடித்த விஜயசேதுபதி, பாபி சிம்ஹாவுடன் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதோடு கவர்ச்சி நாயகி என்கிற இமேஜில் சிக்கியுள்ள அஞ்சலி, இந்த படத்தில் முழு பர்பாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆக, கார்த்திக் சுப்புராஜின் இந்த இறைவி படமும் அதில் நடித்துள்ள நடிகர் நடிகைகளுக்கு பெரிய பெயரை வாங்கிக்கொடுக்கும் என்று தெரிகிறது.
மேலும், இதன்பிறகு அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப் பட்ட கார்த்திக் சுப்புராஜ், அஜித்திற்கு ஒரு கதையை ரெடி பண்ணி அவர் வேதாளம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் சொல்லியிருக்கிறார். ஆனால், எப்போதுமே படத்தின் அவுட்லைன், ஓப்பனிங், க்ளைமாக்ஸ் பற்றி மட்டுமே முதலில் கேட்கும் அஜித், தனது பாணியிலேயே கதை கேட்டிருக்கிறார். ஆனால், அந்த கதை அஜித்தின் பாணிக்கு ஏற்ப இல்லாமல், கார்த்திக் சுப்புராஜின் பாணியிலேயே இருந்திருக்கிறது. அதனால் எனக்கு செட்டாகாது என்று சொல்லி நடிக்க மறுத்து விட்டாராம்.
அதையடுத்து, அதே கதையை விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் எப்போதும் தனது ரசிகர்களை மனதில் கொண்டே கதை கேட்கும் விஜய்க்கும் அவர் சொன்ன கதை மீது ஈர்ப்பு வரவில்லையாம். அதனால் அவரும் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி கைவிரித்து விட்டாராம்.