ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாளை விஜய்யின் 'புலி' படம் வெளியாகிறது.. தமிழில் 'கத்துக்குட்டி' என்கிற ஒரு படம் மட்டுமே புலியுடன் மோதிப்பார்ப்போம் என தைரியமாக வெளியாகிறது. அதேபோல கேரளாவில் 2௦௦ தியேட்டர்களில் வெளியாக இருக்கும் புலிக்கு எதிராக இந்த வாரம் வேறெந்த மலையாள படங்களும் ரிலீஸாகாது என்று சொல்லப்படுகிறது.. ஆனால் இதனால் எல்லாம் புலிக்கு அங்கே எதிர்ப்பு இல்லையென சொல்லிவிடமுடியாது.. தற்போது கேரளாவில் வீசுவது 'மொய்தீன்' அலை... அடிப்பது 'காஞ்சனமாலா' ஜுரம்.. அதாவது கடந்த ஒரு வாரமாக ரசிகர்களை தன வசம் இழுத்துக்கொண்டே இருக்கிறது பிருத்விராஜ் நடித்த 'என்னு நிண்டே மொய்தீன்'.
இந்த நேரத்தில் வெளியான ஜீத்து ஜோசப் - திலீப் கூட்டணியில் உருவான 'லைப் ஆப் ஜோஸுட்டி' படமே வசூலில் ஆட்டம் கண்டுள்ளது. இந்தநிலையில் நாளை வெளியாகும் புலிக்கு விஜய்யின் ரசிகர்கள் தரப்பில் வேண்டுமானால் ஓரளவு வரவேற்பு கிடைக்கலாமே தவிர, பொதுவான ரசிகர்களின் கவனம் எல்லாம் 'மொய்தீனை பார்க்கத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முன் கேரளாவில் சூர்யாவின் 'மாஸ்' ரிலீசானபோது, அந்த சமயத்தில் நிவின்பாலியின் 'பிரேமம்' அலை வீசியதால் 'மாஸ்' மவுசு இழந்துபோன கதையை இங்கே ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.