விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆர்யா, கிருஷ்ணா, சுவாதி, தீபா சனனதி நடிப்பில் உருவாகியுள்ள யட்சன் படம், செப்., 11ம் தேதி வெள்ளியன்று வெளியாகியுள்ளது. எழுத்தாளர்கள் சுபா எழுதிய கதை ஒன்று வாரஇதழில், யட்சன் என்ற பெயரில் வெளியானது. அதைத்தான் படமாக இயக்கியுள்ளார்கள். இந்நிலையில் இப்படம் நாளை வெளியாக உள்ளநிலையில், படத்தின் ரிலீஸ்க்கு முன்பாக யட்சன் கதையையும் புத்தகமாக வெளியிட இருக்கிறார்கள். சென்னை, பிரசாத் லேப்பில் காலை 10.00 மணிக்கு யட்சன் புத்தகத்தை, இயக்குநர் விஷ்ணுவர்தன் முன்னிலையில் நடிகர் ஆர்யா வெளியிட நடிகர் கிருஷ்ணா பெற்று கொள்கிறார். இந்தப்புத்தகத்தை சுபா பப்ளிகேஷனே வெளியிடுகிறார்கள்.
முதன்முறையாக ஒரு படத்தோடு, அந்தப்படம் தொடர்பான புத்தகமும் வெளியிடப்படுவது இதுதான் முதல்முறை. ஆக தமிழ் சினிமாவுக்கு இது புதுசு...!
இதனிடையே விஷ்ணுவர்தன் நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது...
இதுவரை நான் 8 படங்கள் இயக்கியுள்ளேன். இதில் அஜித்தை வைத்து 2 படமும், ஆர்யாவை வைத்து 5 படங்களும் இயக்கியுள்ளேன். இரண்டு பேரும் என்னை நம்புவார்கள். சிலரோடு மட்டும் தான் நாம் படம் பண்ணும் போது ஒரு திருப்தி இருக்கும். அந்த திருப்தி இருவரிடமும் உள்ளது. அதனால் தான் தொடர்ந்து இவர்களோடு படம் பண்ணுகிறேன். இப்படித்தான் படம் எடுப்பேன் என்று எந்தவொரு வரைமுறையும் இருக்காது. எனக்கு எது பிடிக்குமோ அதைத்தான் படமாக இயக்குவேன் என்று கூறினார்.