‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பெரிய பெரிய இசைஞானிகளும், இசைப்புயல்களும் களத்தில் இருக்கும் தமிழ்ச்சினிமாவில் புதிய சிறிய இசையமைப்பாளர்களும் இசையமைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் பாடல் வெற்றியுடன் படவெற்றியையும் பார்க்கிறார்கள். சண்டி வீரன் இசையமைப்பாளர் அருணகிரி படத்தின் பாடல்களின் வெற்றியால் மகிழ்ச்சியில் நனைந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக அலுங்குற குலுங்குற பாடல் பிரமாத வெற்றி பெற்றுள்ளது.
இவர் ஏற்கெனவே கோலி சோடா' படத்தின் பாடல்களில் கலக்கியவர். விஜய்மில்டன் இயக்கி அடுத்த படம் வருவதற்குள் இவர் இசையமைத்து அடுத்த படம் சண்டி வீரன் வந்து விட்டது. இதுபற்றி விஜய் மில்டனே பாராட்டியிருக்கிறாராம்.
வீட்டுக்காக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர் தனக்காக தனக்குள் இசையார்வத்தை விடாமல் வளர்த்து கலாஷேத்ராவில் ரெஜி ஜார்ஜிடம் கர்நாடக இசை, அகஸ்டினிடம் மேற்கத்திய இசை என கற்று இருக்கிறார். ஏவிஎம் உள்பட பலநிறுவன டிவி சீரியல்களிலும் பணியாற்றியவர்.
பாலா தயாரிப்பில் சண்டி வீரன் வாய்ப்பு வந்ததும் ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்று தார்ஷெனாயை பின்னணி இசைக்குப் பயன்படுத்தியுள்ளார். இதை தமிழ்சினிமாவில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்திற்கு மட்டும்தான் இளையராஜா பயன்படுத்தியுள்ளாராம். சண்டி வீரன் பாடல்களை கேட்டுவிட்டு பாலாவும் சற்குணமும் பாராட்டியதுதான் முதல் பாராட்டு. பாடல் கேட்டுவிட்டு முகந்தெரியாத மனிதர்களிடமிருந்து தினமும் பாராட்டுகள் வருகின்றனவாம். அருணகிரி கையில் யாழ், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது , வீரையன் என படங்கள் உள்ளன. படங்களுக்கிடையில் நீண்டகாலத்திட்டமாக அருணகிரிநாதரின் திருப்புகழுக்கு அருணகிரி புதியமுறையில் இசையமைத்து வருகிறாராம். அட!