ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை சினேகாவுக்கு நேற்று இரவு 1.55 மணிக்கு, சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தனது நடிப்பாலும், அழகான சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த சினேகா, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது நடிகர் பிரசன்னாவை காதலிக்க தொடங்கிய சினேகா, 2012ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சில படங்களில் நடித்த சினேகா அதன்பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சினேகா கர்ப்பமானார். தொடர்ந்து கடந்த ஜூன் 18ம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சினேகாவுக்கு வளைகாப்பும் நடந்தது.
இந்நிலையில் சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட உடனடியாக சென்னை, தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். சுகப்பிரசவம் ஆக வழியில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் நேற்று இரவு 1.55 மணியளவில் சினேகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் எடை 2.08 கிலோ இருப்பதாகவும், தற்போது சினேகாவும், குழந்தையும் நன்றாக இருப்பதாக நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.