ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கவிஞர் வைரமுத்து பிறந்தநாள்விழா கவிஞர்கள் திருநாளாக நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் கவிஞர் சல்மா விருதும் பரிசும் பெற்றார். இவ்விழாவில் பேசிய கபிலன், தந்தை வைரமுத்துவை மேடையில் வைத்துக் கொண்டே அப்பா வழியில் தங்களால் செல்லமுடியாது என்றார்.
கபிலன் வைரமுத்து பேசும் போது "நாங்கள் அப்பாவின் பிறந்தநாள் விழாவை பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். வழங்கப்படுகிற பரிசுப் பொருள்களையும் பார்த்து வருகிறோம் எல்லாமே மாறியுள்ளன. இப்போது தலைமுறை மாறிவிட்டது. போன தலைமுறையோடு இந்ததலைமுறை துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று உலக மயமாகி வணிக நிறுவனங்கள் ஒரே மாதிரியான இளைஞர்களை தயாரித்து வருகின்றன. அவர்களுக்கு நிதி முக்கியம் நிம்மதி முக்கியமில்லை. அறிவு முக்கியம் அன்பு முக்கியமில்லை.
அதனால் அப்பாவைப் பின்பற்றுவது என்பது முடியாத ஒன்றாக இருக்கிறது. அவருக்கு பேச்சுத்தமிழ் , எழுத்துதமிழ், கவிதைத்தமிழ் பாடல்தமிழ், மேடைத்தமிழ், விஞ்ஞானத் தமிழ் என்று பல தமிழ் நடைகள் இருக்கின்றன. இதை எல்லாம் எங்களால் பின்பற்ற முடியாது அவ்வளவு சிரமம். எனவே அவர் வழியில் நாங்கள் போக முடியாது." இவ்வாறு கபிலன் வைரமுத்து பேசினார்.
பிறகு பேசிய வைரமுத்து,என் பிள்ளைகளான உங்களுக்கு நான் விட்டுச் செல்கிற சொத்து பெரிதாக எதுவுமில்லை இந்த மனித உறவுகள்தான். இவர்களை அருகில் வைத்து உறவாடினால் அனைத்தும் கிடைக்கும். ஏனென்றால் மனிதர்களால் ஆனது தான் வாழ்வு" என்று அறிவுரை கூறினார்.