'ஆபரேஷன் சிந்தூர்' : டிரேட் மார்க் பதிவுக்கான விண்ணப்ப சர்ச்சை | 'ரெட்ரோ' ருக்கு - வாழ்த்தியவர்களுக்கு பூஜா ஹெக்டே நன்றி | லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் |
கவிஞர் வைரமுத்து பிறந்தநாள்விழா கவிஞர்கள் திருநாளாக நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் கவிஞர் சல்மா விருதும் பரிசும் பெற்றார். இவ்விழாவில் பேசிய கபிலன், தந்தை வைரமுத்துவை மேடையில் வைத்துக் கொண்டே அப்பா வழியில் தங்களால் செல்லமுடியாது என்றார்.
கபிலன் வைரமுத்து பேசும் போது "நாங்கள் அப்பாவின் பிறந்தநாள் விழாவை பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். வழங்கப்படுகிற பரிசுப் பொருள்களையும் பார்த்து வருகிறோம் எல்லாமே மாறியுள்ளன. இப்போது தலைமுறை மாறிவிட்டது. போன தலைமுறையோடு இந்ததலைமுறை துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று உலக மயமாகி வணிக நிறுவனங்கள் ஒரே மாதிரியான இளைஞர்களை தயாரித்து வருகின்றன. அவர்களுக்கு நிதி முக்கியம் நிம்மதி முக்கியமில்லை. அறிவு முக்கியம் அன்பு முக்கியமில்லை.
அதனால் அப்பாவைப் பின்பற்றுவது என்பது முடியாத ஒன்றாக இருக்கிறது. அவருக்கு பேச்சுத்தமிழ் , எழுத்துதமிழ், கவிதைத்தமிழ் பாடல்தமிழ், மேடைத்தமிழ், விஞ்ஞானத் தமிழ் என்று பல தமிழ் நடைகள் இருக்கின்றன. இதை எல்லாம் எங்களால் பின்பற்ற முடியாது அவ்வளவு சிரமம். எனவே அவர் வழியில் நாங்கள் போக முடியாது." இவ்வாறு கபிலன் வைரமுத்து பேசினார்.
பிறகு பேசிய வைரமுத்து,என் பிள்ளைகளான உங்களுக்கு நான் விட்டுச் செல்கிற சொத்து பெரிதாக எதுவுமில்லை இந்த மனித உறவுகள்தான். இவர்களை அருகில் வைத்து உறவாடினால் அனைத்தும் கிடைக்கும். ஏனென்றால் மனிதர்களால் ஆனது தான் வாழ்வு" என்று அறிவுரை கூறினார்.