ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மீடு சர்ச்சையின்போது பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார் பாடகி சின்மயி. தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை மற்றும் பாலியல் தொல்லை பற்றி குரல் கொடுத்து வருகிறார். அதோடு வைரமுத்துவிற்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.
இந்நிலையில் வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு வைரமுத்து இலக்கியம் 50 எனும் இலச்சினையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வாழ்த்தினார். இதுப்பற்றி, வாவ் என குறிப்பிட்டார் சின்மயி. மேலும், ‛‛இந்த வாவை பாத்துட்டு 'அவர பாராட்டுறீங்களே'ன்னு அறிவிலிகள் தான் கேப்பாய்ங்க. எத்தன பொண்ணுங்க மேல கைய்ய வெச்சாலும் எல்லா சப்போர்டும் உண்டுன்னு வெட்ட வெளிச்சமா தெரியுதே நம்ம முற்போக்கு நாட்ல. பெண்கள் இங்க பாதுகாப்பு எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. நாம நம்ம வேலைய பாப்போம்'' என பதிவிட்டுள்ளார்.