ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எந்த நேரத்தில் நகுல் நடித்த நாரதன் படத்திற்கு நாரதன் எனப்பெயர் சூட்டினார்களோ? பாவம்., நாரதன் நாயகர் நகுல் அதிக சம்பளம் கேட்டு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கே வரவில்லை...என தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் நாரதன் படத்தின் தயாரிப்பு தரப்பு புகார் பட்டியல் வாசிக்க., உடனடியாக, தன் தரப்பு நியாயத்தை நடிகர் சங்கத்திற்கு கடிதமாக அனுப்பியுள்ளார் நகுல். கூடவே, அதனோடு தனக்கு ரூ. 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டு அக்ரிமெண்ட்டும் போடப்பட்டிருக்கும் விஷயத்தையும் அதன் காப்பியையும் நடிகர் சங்கத்திற்கு நகுல் அனுப்பிய பின் தான் நகுல் மீதுள்ள நியாயம் நடிகர் சங்க செயலாளர் ராதாரவிக்கே தெரியவந்திருக்கிறது. அதில் உள்ள விவரப்படி., நகுலுக்கு ரூ. 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டு, பல தவணைகளாக, ரூ. 32 லடசம் தரப்பட்டிருக்கிறது. மீதி ரூ. 18 லட்சம் வந்தால்தான் மத்திய அரசின் புதிய உத்தரவுப்படி, வாங்கிய சம்பளத்திற்கு வரிகட்டும் உத்தேசத்தில் இருந்திருக்கிறார் நகுல். வரியை உரிய நேரத்தில் கட்டி முடிக்காவிட்டால் மாதாமாதம் காலதாமத பெனால்டி கட்ட வேண்டுமாம்.