ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கர் - ரஜினி கூட்டணியில், கடந்த 2010ம் ஆண்டு வௌிவந்த படம் எந்திரன். ரோபோவை மையமாக வைத்து வௌிவந்த இப்படம் இந்திய சினிமாவின் ஒரு மைல்கல். தொழில்நுட்ப ரீதியாக பல விஷயங்களை இப்படத்தில் புகுத்தியிருந்தார் ஷங்கர். இப்படம் வெற்றி பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது. இந்நிலையில், 'ஐ' படத்திற்கு பிறகு ஷங்கர் ஏற்கனவே சொன்னபடி எந்திரன்௦-2 பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார். இதற்கான கதை விவாதம் உள்ளிட்ட பணிகளில் தனது குழுவோடு ரகசியமாக செய்து வந்தார்.
அதோடு, அவ்வப்போது ரஜினியும், எந்திரன்-2 கதை விவாதத்தில் பங்கேற்று வந்தார். மேலும், ரஜினியோடு வில்லனாக கமல், விக்ரம், பாலிவுட் நடிகர் அமீர்கான் போன்ற நடிகர்களை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வந்தன. இருதினங்களுக்கு முன்னர் கூட ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிக்கப்போவதாக தகவல் வந்தது.
இந்நிலையில், எந்திரன்-2 படத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.அதாவது எந்த மாதிரி காட்சிகள் வர வேண்டும், எந்தமாதிரி கிராபிக்ஸ் காட்சிகள் இருக்க வேண்டும் உள்ளிட்ட விஷயங்களை ஷங்கர் இறுதிசெய்துவிட்டாராம். தற்போது ரஜினி, அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தின் ஷூட்டிங் இந்தாண்டு இறுதிக்குள் முடிந்துவிடும், இதை முடித்த பின்னர் எந்திரன்-2 படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படி பார்க்கையில் எந்திரன்-2 படம் 2016ம் ஆண்டு துவக்கத்தில் துவங்கும் என தெரிகிறது.
எந்திரன் படத்தை காட்டிலும் இன்னும் பிரமாண்டமாய் எந்திரன்-2 உருவாக இருக்கிறது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. எந்திரன் படத்தில் பணியாற்றிய வேல்ராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களும் எந்திரன்-2விலும் பணியாற்ற இருக்கின்றனர்.