‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, எனக்குள் ஒருவன், இன்று நேற்று நாளை என பல படங்களை தனது திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரித்து வெளியிட்டவர் சி.வி.குமார். தற்போது இறைவி, 144, எஸ்கிமோ காதல், மாயவன் போன்ற படங்களையும் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது தயாரிப்பில் விஷ்ணு நடித்த முண்டாசுப்பட்டி வெற்றி பெற்றது. அதையடுத்து தற்போது அவர் நடித்து வெளியாகியிருக்கும் இன்று நேற்று நாளை படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்டுக்கு ராசியான நடிகராகி விட்டார் விஷ்ணு.
விளைவு, இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரின் உதவியாளர் ஒருவரும் அடுத்து சி.வி.குமாரிடம் ஒரு கதை சொல்லி ஓகே பண்ணியுள்ளார். அதோடு, சில ஹீரோக்களை அந்த கதைக்கு பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்று முன்பு கூறி வந்த அவர், இப்போது விஷ்ணு நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறி வருகிறாராம். ஆனால் அந்த படத்தில் நடிக்க விஷ்ணுவிடத்தில் இன்னமும் சிவி.குமார் பேசவில்லை, என்றபோதும் அவர் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாக அந்த கம்பெனி வட்டாரம் தெரிவிக்கிறது.