ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தயாரிப்பாளர் மகனாக இருந்தாலும், இயக்குனரின் மகனாக இருந்தாலும், நடிகரின் மகனாக இருந்தாலும் நல்ல தரமான படங்களில் நடிக்கவில்லை என்றால் ரசிகர்கள் ஒதுக்கி விடுவார்கள். ஆனாலும், சிலர் மட்டுமே அந்தத் தோல்விகளில் இருந்து மீண்டும், மீண்டும் எழ முயற்சிப்பார்கள். அப்படி ஒரு நடிகராக இருந்து வருபவர் ஜீவா. 'கோ' படத்தின் வெற்றிக்குப் பிறகு ''ரௌத்திரம், வந்தான் வென்றான், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், டேவிட், என்றென்றும் புன்னகை, யான்” எனப் பல தோல்விப் படங்களில் நடித்துவிட்டார். இடையில் விஜய் நண்பனாக 'நண்பன்' படத்தில் மட்டும் ஓரளவிற்கு நடிப்பில் நல்ல பெயரை வாங்கினார். மற்ற படங்கள் அனைத்துமே அவருக்கு தோல்வியைத் தந்தும், அவருடைய பெயரைக் குலைத்தும்தான் வந்தன.
இருந்தாலும் இப்போதும் எந்தக் கவலையையும் மனதில் ஏற்றுக் கொள்ளாமல் மீண்டும் மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையில் 'கவலை வேண்டாம், திருநாள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'திருநாள்' படத்தில் நேற்றைய, இன்றைய நம்பிக்கை நாயகி நயன்தாராவும், 'கவலை வேண்டாம்' படத்தில் நாளைய நம்பிக்கை நாயகி கீர்த்தி சுரேஷும் ஜீவா ஜோடியாக நடிக்கிறார்கள்.
'திருநாள்' படத்தில் கிராமத்து இளைஞனனாகவும், 'கவலை வேண்டாம்' படத்தில் நகரத்து இளைஞன்னாகவும் நடித்து வருகிறார். இரண்டு படங்களுமே தனக்குத் திருப்பு முனையாக அமையும் என்ற பெரிய நம்பிக்கையில் இருக்கிறாராம் ஜீவா.