‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
குணசித்திர நடிகராக இருக்கும் நாசர் 20 வருடங்களுக்கு முன்பு அவதாரம் என்ற படத்தை தயாரித்து இயக்கினார். அந்த படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும், வணிக ரீதியில் தோல்வி அடைந்தது. அதனால் படம் தயாரிப்பதையும், இயக்குவரையும் விட்டுவிட்டார். தற்போது காக்க முட்டை, குற்றம் கடிதல் போன்ற படங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் மீண்டும் படம் இயக்குகிற ஆர்வம் வந்திருக்கிறது. இதற்காக நிறைய கதைகள் எழுதி வைத்திருக்கிறார். அதில் முக்கியமானது பிணை என்ற கதை. இது சந்தனக் கடத்தில் வீரப்பனை பற்றியது. வித்தியாசமான, புதிய பாணியிலான திரைக்கதையாக இது இருக்கும். திரைக்கதையை முடித்து விட்டு இப்போது தீவிரமாக வசனம் எழுதிக் கொண்டிக்கிறார். விரைவில் படம் இயக்குவது பற்றி அறிவிப்பார் என்று தெரிகிறது.