‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
எந்த துறையாக இருந்தாலும் அதில் திறமை இருந்தால் கண்டிப்பாக ஜெயிக்கலாம். சினிமாவும் அப்படித்தான். சின்னத்திரையில் இருந்த சிவகார்த்திகேயன் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றைய இளைஞர்களின் ரோல் மாடல் என்று கூட சிவகார்த்திகேயனை சொல்லலாம். திறமையால் சினிமாவில் சாதித்து காட்டியவர். மெரினாவில் குதித்து, எதிர்நீச்சல் போட்டு சாதித்து காட்டியவர்.
இன்றைக்கு, சென்னையை அடுத்த பனையூரில், கடற்கரை ஓரமாக தன் கனவு இல்லம் ஒன்றை கட்டி குடி புகுந்துள்ளார். சமீபத்தில் தான் தன் புது வீட்டிற்கான புதுமனை புகுவிழாவையும் நடத்தியுள்ளார். இதில் தன் நெருங்கிய உறவினர்கள், சினிமா நண்பர்கள் ஆகியோருக்கு மட்டும் அழைப்பு விடுத்தார். அவர்கள் மட்டும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
சிவகார்த்திகேயன், தன் அம்மாவுக்காகவும், குடும்பத்திற்காகவும் கட்டிய முதல் கனவு வீடு இது தானாம்.