ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து வௌிவந்த படம் லிங்கா. ரஜினியின் நண்பர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருந்தார், ஈராஸ் நிறுவனம் இப்படத்தை வௌியிட்டது. ஆனால் இப்படம் தோல்வி படமாக அமைந்தது. லிங்கா படத்தால் எங்களுக்கு நஷ்டம் என விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கினர். இதுதொடர்பாக நடந்த பிரச்னைகள் எல்லாம் அனைவரும் அறிந்ததே. இதனையடுத்து ரஜினி சார்பில், திருப்பூர் சுப்ரமணியம் என்பவர் லிங்கா படத்தின் நஷ்டஈட்டு தொகை எவ்வளவு என்பதை கணக்கிட நியமனம் செய்யப்பட்டார். அவர் விநியோகஸ்தர்களிடம் எவ்வளவு நஷ்டம் என்பதை கேட்டறிந்து அதை ரஜினியிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈட்டு தொகையாக ரூ.12.50 கோடி தர முடிவானது. இதனால் விநியோகஸ்தர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இந்தசூழலில் சில தினங்களுக்கு முன்னர் தங்களுக்கு உரிய நஷ்டஈட்டு தொகை இன்னும் வந்து சேரவில்லை என விநியோகஸ்தர்கள் சிலர் மீண்டும் போர்க்கொடி தூக்கினர். இதுதொடர்பாக அடுத்தக்கட்ட போராட்டத்தையும் அவர்கள் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், திருப்பூர் சுப்பிரமணியம் இப்பிரச்னை தொடர்பாக, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது...
ரூ.12.50 கோடி தர சம்மதம்
லிங்கா நஷ்டஈடு தொடர்பாக ரஜினியின் ஆலோசனையின் படி நான் விநியோகஸ்தர்களிடம் பேசினேன். அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்ட ஈட்டு தொகையை சொன்னார்கள். சுமார் ரூ.30 கோடி தர வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கேட்டார்கள். ஒருவழியாக பேசி ரூ.12.50 கோடி தர தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் ரஜினி ஆகியோர் சம்மதித்தனர். விநியோகஸ்தர்களும் அதற்கு உடன்பட்டனர்.
இரண்டொரு நாளில் செட்டிலாகிவிடும்
சொன்னபடி சுமார் ரூ.6 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈட்டு தொகை பிரித்து கொடுக்கப்பட்டு விட்டது. தயாரிப்பாளர் வெங்கடேஷ் இன்னும் மீதி பணத்தை தரவில்லை. அவர், அவருடைய இல்ல திருமணத்தில் பிஸியாக இருக்கிறார். இன்னும் இரண்டொரு நாளில் அந்த பணத்தையும் அவர் கொடுத்துவிடுவார். அதன்பின்னர் மீதி பணத்தையும் நாங்கள் முழுவதுமாக விநியோகஸ்தர்களுக்கு செட்டில் செய்துவிடுவோம். இரண்டொரு நாளில் இந்த பிரச்னைகள் எல்லாம் முடிந்துவிடும்.
நான் ஒரு போஸ்ட்மேன் மட்டும் தான்
இந்த பிரச்னையில் நான் ஒரு போஸ்ட் மேனாகத்தான் செயல்பட்டேன். இதில் நான் ஏதோ கமிஷன் பார்த்தது போன்று சிங்காரவேலன் கூறி வருகிறார். சிங்காரவேலன் தேவையில்லாத பிரச்னையை கிளப்புகிறார்.
ரஜினி எந்த கமிட்மென்ட்டும் கொடுக்கவில்லை
நஷ்ட ஈட்டு தொகை வழங்குவதற்கு மட்டுமே ரஜினி சம்மதித்தார். மற்றபடி அவர் ஒரு படத்தில் நடித்து தருவதாக எந்த ஒரு உறுதியும் தரவில்லை. அவர்கள் கூறுவது முழுக்க முழுக்க பொய்யான தகவல்.
சிங்காரவேலன் தகுதியில்லாதவர்
சிங்காரவேலன், சினிமா வியாபாரம் செய்வதற்கே தகுதியானவரே கிடையாது. எந்த ஒரு அனுபவமும் அவருக்கு கிடையாது. கங்காரு, திறந்திடு சீஸே படத்தை வியாபாரம் செய்து தருவதாக அந்த இரண்டு தயாரிப்பாளரையும் ஏமாற்றியுள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது. சிங்காரவேலனிடம் யாரும் வியாபாரம் செய்யாதீர்கள்.
இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் கூறினார்.
இந்த பிரஸ்மீட்டின் போது நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு, சென்னை, திருவள்ளூர், செல்கல்பட்டு விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.