‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடத்தில் உதவியாளராக இருந்தவர் அட்லி. அதோடு ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ஆர்யா-நயன்தாரா நடித்த ராஜா ராணி என்ற படத்தை முதன்முதலாக இயக்கினார். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் அடுத்த படத்தை ஒரு மெகா ஹீரோவை வைத்துதான் இயக்குவேன் என்ற தீர்க்கமான முடிவில் இருந்த அட்லி, பின்னர் சில ஹீரோக்களிடம் கதை சொன்னார். அவர்களில் விஜய், அவருக்கு கால்சீட் கொடுத்தார்.
அதுவும், தலைவா படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருந்தபோதே கதை சொல்லி ஓகே வாங்கினார். அப்போது ஏ.ஆர்.முருகதாஸின் கத்தி, சிம்புதேவனின் புலி ஆகிய படங்களை முடித்து விட்டுதான் கால்சீட் தருவேன் என்று சொன்னார். அதற்கு, நீங்கள் எப்போது கால்சீட் கொடுத்தாலும் அதுவரை நான் காத்திருக்கிறேன் என்று சொன்ன அட்லி, அந்த கேப்பில் தான் காதலித்து வந்த நடிகை ப்ரியாவையும் திருமணம் செய்து கொண்டார்.
இப்போது விஜய் புலி படத்தில் நடித்து முடித்து விட்டதால் தனது பட வேலைகளில் மும்முரமாகி விட்டார் அட்லி. மேலும், இந்த படத்தில் ஏற்கனவே பல படங்களில் நடித்த நடிகர் நடிகைகளை புக் பண்ணினாலும் அவர்களை ஆடிசன் வைத்தே புக் பண்ணி வருகிறார். அந்த வகையில், ஒரு காட்சியில் நடிக்க வேண்டிய டயலாக்குகளை சொல்லி நடிக்க வைத்து செலக்ட் பண்ணிக்கொண்டிருக்கும் அட்லி, பிரபலமான நடிகர்கள் என்பதைவிட தான் கேட்கும் 50 நாள், 60 நாள் கால்சீட்டை முழுசாக கொடுப்பவர்களுக்கே முதலிடம் கொடுத்து டிக் அடித்து வருகிறார்.
மேலும், தற்போது கிடைத்த தகவல்படி, வருகிற ஜூலை 20-ந்தேதி முதல் விஜய்-அட்லி இணையும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குவதாக தெரிகிறது.