‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்தவர் அகிலா கிஷோர். முதல் படத்திலேயே யதார்த்தமாக நடித்து கோலிவுட்டில் பேசப்படும் நடிகையானார். குறிப்பாக, பாரதிராஜா போன்ற மேல்தட்டு இயக்குனர்களே அவரது நடிப்பை உச் கொட்டி பேசினர்.
இந்த தகவலை பார்த்திபன் அகிலாவிடம் பாஸ் பண்ணியபோது, உச்சி குளிர்ந்து போனாராம். அதோடு, அப்படியென்றால் அடுத்து கோடம்பாக்கத்தில் நாம்தான் உச்ச நடிகை என்ற உற்சாகத்தில் இருந்தார் அகிலா. ஆனபோதும், அவருக்கு பெரிதாக படங்கள் புக்காகவில்லை.
மூன்றாம் உலகப்போர், இனிமே இப்படித்தான் ஆகிய படங்கள்தான் கிடைத்தன. இந்த இரண்டு படங்களிலுமே முதல் படத்தை விடவும் நடிப்பிலும், கவர்ச்சியிலும் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணியிருக்கிறாராம் அகிலா கிஷோர். அதோடு, வெயிட்டான கதாபாத்திரங்களை அனுஷ்கா போன்று தாங்கக்கூடிய நடிகை என்றும் அப்படங்களில் டைரக்டர்கள் அவரை புகழ்ந்து பேசி வருகின்றனர்.