‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தற்போதைய புதுமுக இயக்குனர்கள் இளையராஜாவை தங்கள் படங்களுக்கு இசையமைக்க வைக்க ஆசைப்பட்டாலும், ரொம்ப பெரிய இசையமைப்பாளர் இளையராஜா. அவரிடம் எப்படி நாம் வேலை வாங்க முடியும் என்று பயந்து மற்ற இசையமைப்பாளர்களிடம் செல்கிறார்கள்.
அதேசமயம், தைரியமாக இளையராஜாவிடம் இசையமைக்க செல்பவர்கள், அவரிடம் சென்றதும் அவர் ஒரு டியூனை போட்டுக்காட்டியதும், அந்த டியூன் ஒருவேளை தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை இளையராஜாவிடம் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார்களாம்.
ஆனபோதும், அவர்களின் தடுமாற்றத்தை புரிந்து கொள்ளும் இளையராஜா, அதை காட்டிக்கொள்ளாமல், சரி வேற டியூன் போடுறேன் கேளுங்க என்று வெவ்வேறு டியூன்களை சரமாரியாக போட்டுக்காட்டுகிறாராம். இப்படியாக அவர்களின் கண்களில் திருப்தி தெரியும் வரை டியூன்களை போட்டுக்கொண்டேயிருக்கிறாராம்.
இளையராஜாவின் இந்த மனநிலையை அவரிடம் இசையமைக்க சென்று விட்டு திரும்பிய புதுமுக இயக்குனர்கள் வெளியில் வந்து அவரை பெருமையாக சொல்கிறார்கள். அதோடு, நாம் நினைத்த மாதிரி இல்லை இளையராஜா. ரொம்ப பெரிய ஆளாக இருந்தாலும், எளிமையாக, இனிமையாக பழகுகிறார். குறிப்பாக, டியூன் விசயத்தில் அவர் காம்பரமைஸ் ஆவதே இல்லை. நம்முடைய திருப்தியை மனதில் கொண்டே செயல்படுகிறார் என்கிறார்கள்.