ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சாலை விபத்து வழக்கில் ஐந்து ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ரசிகர்களும் பாலிவுட் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தெலுங்கு நடிகை ரேணு தேசாய் துணிந்து நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பாராட்டியுள்ளார். மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே நேற்று உத்தரவிட்டார்.
இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை ரேணு தேசாய் தெருக்களில் குழந்தைகளுடன் குடும்பமாய் விலங்குகளைப் போல் மக்கள் துங்குவதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. மேலும் சாலை என்பது வாகனங்களுக்கா மட்டுமே தவிர மக்கள் உறங்குவதற்காக அல்ல. நீதிமன்றத்தின் இது போன்ற தீர்ப்பு தேவையான ஒன்று தான். இதே போல் சாலையோரம் உறங்கும் மக்களுக்காக அரசாங்காம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். நடிகை ரேணு தேசாய் தெலுங்கு திரையின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.