‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அந்நிய நாட்டவரை இந்த மண்ணில் காலூன்ற விடமாட்டோம் என எதிர்த்து போராடிய மலையாள தேசத்தின் மாபெரும் போராட்ட வீரர் தான் குஞ்சாலி மரைக்காயர். அந்த மாவீரர் குஞ்சாலி மரைக்காயர் வரலாற்றை படமாக்கவேண்டும் என்கிற ஆர்வம் பல மலையாள இயக்குனர்களுக்கு இன்றும் உண்டு. ஆனால் நாடக வடிவில் அதற்கு முதலில் பிளையார் சுழி போட்டவர் பிரபல மலையாள இயக்குனரான டி.கே.ராஜீவ் குமார்.
மலையாள சினிமாவில் 35 வருட சரித்திரம் கொண்ட இவர் தான் புகழ்பெற்ற மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கியவர்.. இவர்தான் குஞ்சாலி மரைக்காயர்' நாடகத்தை அவ்வப்போது நடத்தி வருகிறார். கடந்த ஜனவரியில் கேரளாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க நாள் விழாவில் கூட 'குஞ்சாலி மரைக்காயர்' நாடகத்தை அரங்கேற்றினார். அதில் குஞ்சாலி மரைக்காயராக மோகன்லால் நடித்த அதிசயமும் அப்போது அரங்கேறியது..