ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சூர்யா. ஃபேண்டஸி கதை என்ற பெயரில் எடுக்கப்பட்டு வரும் பேய்ப்படம் இது. தமிழ்த்திரை உலகில் தற்போது ஆவிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் முன்னணி ஹீரோவான சூர்யாவும் ஆவியை நம்பி களத்தில் இறங்கி உள்ளார். கடைசியாக அவர் நடித்த அஞ்சான் மிகப்பெரிய தோல்விப்படமாகிவிட்டதால் மாஸ் படத்தையே நம்பி இருக்கிறார்.
மாஸ் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, டப்பிங்கும் முடிவடைந்துவிட்டது. எனவே விக்ரம்குமார் இயக்கும் 24 படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் சூர்யா. இன்னும் ஒரு சில நாட்களில் ஃபர்ஸ்ட்காப்பி தயாராகிவிடும் நிலையில் உள்ளது மாஸ் பட வேலைகள் சூடுபிடித்துள்ளன. தற்போது கிடைத்த தகவலின்படி மாஸ் படத்தை மே 15 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். சூர்யாவுக்கு எப்படியும் வெற்றியைத் தேடிக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்துடன் சுமார் 500 தியேட்டர்களில் மாஸ் படத்தை வெளியிட உள்ளனர்.