‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
டைட்டிலை பார்த்ததும் ஜெயராமுக்கு ஏன் இப்படி ஒரு ஆசை என்கிற கேள்வி உங்களுக்குள் எழத்தான் செய்யும். ஆனால் அதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஜெயராம் தற்போது மலையாளத்தில் நடித்துவரும் படம் 'திங்கள் முதல் வெள்ளி வரை'.. கண்ணன் தாமரக்குளம் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் கதைக்களமே டிவி சீரியலின் பின்னணியில் தான் பின்னப்பட்டுள்ளது. கதாநாயகன் ஜெயராம் மெகா சீரியலுக்கு கதை எழுதும் எழுத்தாளராக இதில் நடிக்கிறார். கதாநாயகி ரிமி டாமியோ தினந்தோறும் சீரியல் அத்தனையையும் ஒன்றுவிடாமல் பார்த்துவிடும் சீரியல் பைத்தியம் பிடித்த கிராமத்து பொண்ணு.
குறிப்பாக ஜெயராம் கதை எழுதும் சீரியல் தான் அவரது பேவரைட். இந்த சீரியலை தயாரிப்பவராக நடிக்கிறார் அனூப் மேனன். இவர்கள் மூவருக்குள் ஏற்படும் கலாட்டாக்கள் தான் படத்தின் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. கதாநாயகி ரிமி டாமி அடிப்படையில் ஒரு பின்னணி பாடகி.. ஏற்கனவே ஐந்து கதைகளை உள்ளடக்கி வெளியான 'அஞ்சு சுந்தரிகள்' படத்தில், ஒரு கதையில் சிறிய ரோலில் நடித்திருந்த இவர் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்.