‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இயக்குநர் சரண் தற்போது ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதில் தனது ஆஸ்தான நாயகன் வினய் நடித்திருந்தார். இந்நிலையில் மறுபடியும் வினய் நாயகனாக நடிக்க அம்புசேனை என்ற படத்தை தொடங்கியுள்ளார். .மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருகிறது. தொடர்ந்து சரண் இயக்கத்தில் வினய் நடிப்பது கோடம்பாக்க வட்டாரத்தில் கேள்வியை எழுப்பியுள்ளது. இது பற்றி சரணிடம் கேட்டதற்கு மற்ற நடிகர்களோடு இணைந்து பணியாற்றுவதில் எனக்கு பிரச்சனை இல்லை என் கதைக்கு பொருத்தமாகயிருக்கிறார். அம்புசேனை த்ரில்லான கதை அதற்கு வினய் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தேன்.இது சாதாரணமானதுதான் என்பதை திரைக்கு வரவிருக்கும் ஆயிரத்தில் இருவர் படம் உறுதிப்படுத்தும். மற்றபடி கெமிஸ்ட்ரி என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்கிறார்.