‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஹன்சிகா, தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் உச்சரிக்கப்படும் நடிகையாக இருக்கிறார். ஒரே சமயத்தில் ஐந்தாறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா, சமூக சேவையில் அதிக ஆர்வம் கொண்டவர். பல சிறுவர், சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்துக் கொண்டிருக்கிறார். அவர்களுக்காக தனியாக ஒரு இல்லம் அமைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆவல். அதில் அவருடைய கனவு தற்போது பாதி நிறைவேறியிருக்கிறது. மும்பையிலிருந்து ஒன்றரை மணி நேரப் பயண தூரத்தில் வாடா என்ற இடத்தில் ஒரு ஏக்கர் நிலம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு வாங்கியிருக்கிறார்.
“நீண்ட நாட்களாகவே ஒரு நல்ல இடத்தை வாங்க வேண்டும் என்று முயற்சி செய்து வந்தேன், அது இப்போதுதான் நிறைவேறியுள்ளது. ஒரு நிலத்தை நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வாங்கினேன். அந்த இடம் மிகவும் அழகாகவும், அமைதியாகவும் அமைந்துள்ளது. அம்மாதிரியான ஒரு இடத்திற்காகத்தான் இத்தனை நாட்களாகக் காத்திருந்தேன். அந்த இடத்தில் இன்னும் கட்டிடம் கட்ட ஆரம்பிக்கவில்லை. அந்த நிலத்தை வாங்குவதற்காகவே நிறைய பணம் செலவழித்திருக்கிறேன். கட்டிடம் கட்ட இன்னும் பணத்தை சேர்க்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அந்த கட்டிடத்தை கட்டி முடிப்பேன். அதன்பின், நான் தத்தெடுத்துள்ள சிறுவர், சிறுமிகளையும், வயதானவர்களையும் அங்கு தங்க வைப்பேன்,” என ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே ஹன்சிகாவிற்கு பெரிய மனதுதான், வாய்ச் சொல் வீராங்கனையாக இல்லாமல் செயல் வடிவத்திலும் அடுத்தவருக்கு உதவி செய்வதை நிறைவேற்ற முயற்சித்து வருகிறார். உங்கள் கனவு சீக்கிரம் நிறைவேற வாழ்த்துகள் ஹன்சிகா...!