‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நாணயம், சாவாலே சமாளி, நிம்மதி தொடர்களில் நடித்த மனீஷா ப்ரியதர்ஷினி தற்போது முழுநேர சினிமா நடிகையாகிவிட்டார். ஏற்கெனவே சரத்குமார் நடித்த வைத்தீஸ்வரன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மனீஷா அதன்பிறகு ஒரு பொண்ணு ஒரு பையன், ரகளபுரம், களவாணி, மறுமுனை படங்களில் ஹீரோயின் தோழியாக நடித்தார்.
தற்போது கர்ணனின் காதலி, கொட்டாம்பட்டி தொடக்கப்பள்ளி, அழகான நாட்கள், கலைந்த கனவுகள் என்ற படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். நடிக்க வாய்ப்பு அதிகம் உள்ள கனமான கேரக்டர்களை எதிர்பார்க்கிறார். சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து ஒரே நேரத்தில் 4 படங்களில் ஹீரோயினாக நடிப்பவர் மனீஷா மட்டுமே.