‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
த்ரிஷா - வருண் மணியன் ஜோடியின் திருமணச் செய்தி அறிவிக்கப்பட்ட அன்று மற்றொரு திரை ஜோடியான சமந்தா - சித்தார்த் பிரிவதாக செய்தி வெளியானது. 'ஜபர்தஸ்த்' என்ற தெலுங்குப் படத்தில் சேர்ந்து நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது சில நாட்களுக்கு முன் இருவரும் பிரிந்து விட்டதாக வெளிவந்த செய்தி, தமிழ்த் திரையுலகத்தை விட தெலுங்குத் திரையுலகத்தில்தான் அதிக அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. ஏனென்றால், தமிழில் சமந்தா - சித்தார்த் பற்றி அதிகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சமந்தா தற்போதுதான் 'கத்தி' படத்தின் மூலம் வெற்றியைச் சுவைத்திருக்கிறார். சித்தார்த் தமிழில் வெற்றி பெறுவதற்காக போராடி வருகிறார்.
இதனிடையே இவர்களிருவரும் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'பெங்களூர் டேய்ஸ்' படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. அந்தப் படத்தில் ஆர்யா உள்ளிட்ட மேலும் சிலரும் நடிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், இதுவரை அந்தப் படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என எந்தவிதமான அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை. நிஜ வாழ்க்கையில் பிரிந்தாலும் சமந்தாவும், சித்தார்த்தும் அவர்களது நட்பைத் தொடர்ந்து வருகிறார்கள். ஆனாலும், அவர்களிருவரும் மீண்டும் படத்தில் இணைந்து நடிப்பார்களா என்ற புதிய கேள்வி எழுந்துள்ளது. மார்ச் மாதம் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாம். அதற்குள் ஏதாவது மாற்றங்கள் நிகழுமா, அல்லது இருவரும் இணைந்து நடிக்க சம்மதிப்பார்களா என்பது விரைவில் தெரிந்து விடும் என்கிறார்கள்.