மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கற்க கசடற, நினைத்து நினைத்து பார்த்தேன், முதல் கனவே, நெஞ்சத்தை கிள்ளாதே, எங்கள் ஆசான் என பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் விக்ராந்த். விஜய்யின் சித்தி மகனான இவர், அடுத்த இளையதளபதி போன்று சினிமாவில் புகழ் பெற விரும்பினார். ஆனால், நடித்த படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை. அதனால் பினனர், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, சட்டப்படி குற்றம், பாண்டியநாடு போன்ற படங்களில் கேரக்டர் நடிகராக மாறினார். இதில் பாண்டியநாடு படத்தில் விஷாலின் நண்பராக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதோடு விக்ராந்தின் கேரக்டரும் பேசப்பட்டது. இந்த நிலையில், அடுத்து தான் தயாரிக்கும் ஒரு படத்தில் விக்ராந்தை ஹீரோவாக நடிக்க வைக்கப்போவதாககூட அப்போது விஷால் கூறினார்.
விளைவு, அந்த சமயத்தில் தன்னைத்தேடி வந்த சில கேரக்டர் ரோல்களை தவிர்த்த விக்ராந்த், இனி நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு, பிறவி என்றொரு படத்தில் நாயகனாகவும் நடித்தார். அந்த படத்தை அவரது தம்பியே இயக்கியிருந்தார். ஆனால், அப்படம் இப்போதுவரை விற்பனையாகவில்லை. அதோடு, ஹீரோ சான்ஸ் தருவதாக சொன்ன விஷால் இன்னும அவருக்கு அழைப்பும விடுக்கவிலலை. அதனால், பல மாதங்களாக காத்திருந்த விக்ராந்த், இனியும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லிக்கொண்டிருந்தால், சினிமா உலகம் தன்னை மறந்து விடும் என்பதால் இப்போது மீண்டும் கேரக்டர் வேடங்களில் நடிப்பதில இறங்கியிருக்கிறார். எந்த மாதிரியான வித்தியாசமான வேடங்கள் கிடைத்தாலும் நடிப்பேன் என்று தனது அபிமான டைரக்டர்களிடம் கூறி வருகிறார்.