‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாணா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக்குதிரை ஆகிய படங்களில் நடித்தவர் அதர்வா. இதில் பரதேசி படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதனால் அதன்பிறகு அந்த நல்லபெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஏராளமான கதைகளை கேட்டு அதிலிருந்து சில கதைகளை மட்டுமே ஓ.கே செய்து நடித்தார் அதர்வா.
ஆனால், அவர் நடித்த இரும்புக்குதிரை தோல்வியடைந்து அவரை ஏமாற்றி விட்டது. இருப்பினும் அதையடுத்து ஈட்டி படத்தில் தடகள வீரராக நடித்துள்ள அதர்வா, கணிதன் படத்திலும் நடித்திருப்பவர், அந்த படங்கள் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்திருக்கிறார். அதையடுத்து, களவாணி, வாகை சூடவா இயககுனர் சற்குணத்தின் புதிய படத்துக்காக தற்போது தஞ்சாவூரில் முகாமிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட களவாணி பட சாயலில் கிராமத்து வாசணையுடன் உருவாகும் இந்த படத்திற்கான டைட்டீலை அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனபோதும், அந்த கதைக்கு புழுதி கிளம்பும்போது என்றொரு டைட்டீலை தற்போது வைத்திருக்கிறாராம் சற்குணம். ஆனால், அந்த டைட்டீல் முதலில் அவருக்கு திருப்தியாக இருந்தபோதும் இப்போது வேறு டைட்டீலாக வைக்கலாமே என்று முடிவு செய்திருக்கிறாராம். அதனால், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அதர்வா உள்பட தனது யூனிட்டுடன் அமர்ந்து எந்த மாதிரியான டைட்டீல் வைக்கலாம் என்கிற பரிசீலனையும் நடத்தி வருகிறாராம் சற்குணம்.