போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
சென்னை: நடிகர் ரஜினியின் மனைவி லதா மீது, தனியார் நிறுவன அதிபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இதுகுறித்து, போலீஸ் வட்டாரத்தில் சிலர் கூறியதாவது:ரஜினி நடிப்பில், மே மாதம் வெளியானது, 'கோச்சடையான்' திரைப்படம்.இந்தப் படம் தொடர்பாக, தனியார் நிறுவன அதிபர் ஒருவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கோச்சடையான் படம் வெளியாகும் முன், நடிகர் ரஜினியின் மனைவி லதா மற்றும் திரைப்படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் ஆகிய இருவரும், திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை தருவதாக, தன்னுடன் ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால், ஒப்பந்தத்தை மீறி, வெளியீட்டு உரிமையை வேறொருவருக்கு வழங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.அதனால், தன் உடனான ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, 10.2 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். அதைத்தர லதா ரஜினிகாந்த் மறுக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி உள்ளார்.இவ்வாறு, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
'லதா மீது புகார் கொடுக்கப்பட்டிருந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. முழுமையான விசாரணைக்கு பின்னரே நடவடிக்கை எடுக்க முடியும்' என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அதேநேரத்தில், லதாவுக்கு எதிராக மோசடி புகார் எதுவும் தரப்படவில்லை என்றும், சில போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், லதா மீதான பண மோசடி புகார் குறித்த செய்திகள் ஊடகங்கரில் வெளியானதால், கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.