‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஒரு காலத்தில் ம.தி.மு.வின் பொதுச்செயலாளர் வைகோவின் ஜெராக்ஸ் காப்பியாக இருந்தவர் நாஞ்சில் சம்பத். அந்த கட்சியின் நம்பர் ஒன் நட்சத்திர பேச்சாளர். ஒரு கட்டத்தில் அவரோடு கருத்து வேறுபாடு கொண்டு கட்சியை விட்டு விலகினானர். பிறகு அ.தி.மு.க.வில் இணைந்து இன்னோவா காரை பரிசாக பெற்றார். தற்போது சின்னத்திரை தொகுப்பாளராகி விட்டார் நாஞ்சில் சம்பத்.
வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு சொல் கேளீர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இயக்குனர் விசு நடத்திய மக்கள் அரங்கம் நிகழ்ச்சி பாணியிலானது இது. பல்வேறு தலைப்புகளின் கீழ் பங்கேற்பாளர்கள் விவாதம் செய்ய அதனை கேட்டு தீர்வு சொல்கிற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் முதல்பட்ட படப்பிடிப்பு கோவையில் நடந்துள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.