‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
1992ல் நாளை தீர்ப்பு படத்தில் அறிமுகமானவர் விஜய். அதேபோல் விக்ரம் 1990ல் என் காதல் கண்மணி என்ற படத்தில் அறிமுகமானவர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வித்தியாசத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர்கள் இருவரும் திரைக்குபின்னால் ரொம்ப நல்ல நண்பர்களாம். ஒருவர் நடித்த படத்தை இன்னொருவர் பார்த்து விட்டு உடனே நிறை,குறைகளை மனம் விட்டு பேசிக்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கிடையே துளியும் ஈகோ இல்லாத நட்பு உள்ளதாம்.
இதுபற்றி விஜய் கூறுகையில், விக்ரம் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமான கெட்டப்பில் நடிக்கிறார். அதனால் அவரது ஒவ்வொரு படத்தையும் நானும் ஒரு ரசிகனாக ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். அவரது உழைப்பு ரொம்ப அசாத்தியமானது. அதிலும் ஐ படத்தில் இதுவரை நடித்ததையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பின்னி எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். அதனால் அந்த படம் எனது எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.