ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புனேயை சேர்ந்த சீத்தல் பவா என்ற 17 வயது இளம் பெண் கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புற்று நோயின் கடைசி கட்டத்தை எட்டிவிட்ட அவர் தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர் வீட்டில் தன் கடைசி நாட்களை சந்தோஷத்துடன் கழித்து வருகிறார். அவருக்கு நடிகை ஸ்ருதி ஹாசனை சந்திக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இதனை மேக் அவிஷ் என்ற அமைப்பு ஸ்ருதி ஹாசனுக்கு தெரியப்படுத்தியது.
ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதி. மும்பையில் ஒரு இந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத் தயாரிப்பாளரிடம் ஒரு நாள் அனுமதி வாங்கிக் கொண்டு புனே பறந்தார். அங்கு அவர் சீத்தல் பவாவை சந்தித்ததோடு அவருடன் ஒரு நாள் செலவிட்டார்.
அவருடன் சாப்பிடுவது, விளையாடுவது, பேசிக்கொண்டிருப்பது என்று பொழுதை கழித்தார். மரணத்தை தெரிந்து கொண்ட பிறகும் அதனை துணிச்சலுடனும், மகிழ்ச்சியுடனும் எதிர்கொள்ளும் அந்த பெண்ணின் துணிச்சலை பார்த்து வியந்த ஸ்ருதி. அவரைப் புகழ்ந்து ஒரு கடிதம் எழுதி அவரிடமே கொடுத்து விட்டு திரும்பினார். அந்த கடிதத்தை தினமும் படித்தபடியே தன் இறுதி நாளை நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கிறார் சீத்தல்பவா.