‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
போடா போடி படத்திற்கு பிறகு சிம்பு கதாநாயகனாக நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. அதனால் அவர் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், கடந்த 2 வருடங்களாக வேட்டை மன்னன், வாலு, இது நம்ம ஆளு என்று 3 படங்களில் நீங்கள் நடித்து வருவதாக செய்திகள்தான் வெளியாகிக் கொண்டிருககிறது. ஆனால் எந்த படமும் இன்னும் திரைக்கு வரவில்லையே என்றுதான் கேட்கிறார்களாம்.
அதைக்கேட்டு என்ன பதில் கொடுப்பது என்று யோசிக்கும் சிம்பு, ஏதாவது எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், புலி பதுங்குவது பாயுறதுக்குத்தான். சீக்கிரமே பாயுவேன் என்று அதிரடியாக டயலாக் விடுகிறாராம்.
அதற்கு, இப்படியெல்லாம் ஆவேசமாக பேசினால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து விடுமா? என்று அபிமானிகள் சிம்புவிடம் கேட்டால், நான் நடித்து வரும் படங்கள் இப்போதைய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாகவே இருக்கும். கணடிப்பாக அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்காது. அந்த நம்பிக்கையில்தான் இப்படி சொல்கிறேன். மேலும், நடித்து வரும் படங்களுக்குப்பிறகு நான் நடிக்கிற படங்கள் வருடத்திற்கு ஒன்றாவது கட்டாயம் வெளியாக வேண்டும் என்பதை மனதில் கொண்டே புதிய படங்களில் கமிட்டாவேன் என்றும் சொல்கிறாராம் சிம்பு.