மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நான் படுக்கையறை காட்சியில் நடிக்கவில்லை, என்று நடிகை உதயதாரா கூறியுள்ளார். கண்ணுக்குள்ளே, தீ நகர், மலையன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை உதயதாரா. மலையாள இறக்குமதியான இவர் தற்போது விலை என்ற படத்தில் நடித்து வருகிறார். கதைப்படி, கிராமத்தில் இருந்து வீட்டு வேலைக்காக சென்னை செல்லும் இவர், விபசார கும்பலிடம் சிக்குகிறார். வலுக்கட்டாயமாக விபசாரத்துக்கு பயன்படுத்தப்படும் அவர், அந்த கும்பலிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார், என்பதுதான் சென்டிமென்ட் நிறைந்த விலை படத்தின் கதை.
இந்த படத்தில் உதயதாரா மிகவும் கவர்ச்சியாக நடித்திருப்பதாகவும், படுக்கையறை காட்சியில் நடித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இதையறிந்த உதயதாரா நண்பர்கள், உறவினர்கள் பலரும் போனில் விசாரித்துள்ளனர். இதனால் மன வருத்தத்தில் இருக்கும் உதயதாரா அளித்துள்ள பேட்டியில், விலை சிவப்பு விளக்கு பெண்களை பற்றிய கதை அல்ல. பெண்களுக்கான விழிப்புணர்வு கதை என்று சொல்லலாம். இது மாமூலான படம் அல்ல. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். படத்தின் கதைப்படி விபசார விடுதியில் சிக்கி கஷ்டப்படும் பெண்களில் நானும் ஒருத்தி. அங்கிருந்து எப்படி நான் தப்பிக்கிறேன்? என்பதுதான் கதை. கதையிலும் சரி, படத்திலும் சரி, நெகடிவ் ஆக எதுவும் இல்லை. படத்தில் காதல் கூட இல்லை. என் சம்பந்தப்பட்ட காட்சிகளில், படுக்கை அறை சமாசாரங்கள் வைக்கப்படவில்லை. அப்படிப்பட்ட காட்சிகளில் நான் நடிக்கவில்லை. என்னைத்தவிர மேலும் இரண்டு கதாநாயகிகள், `விலை' படத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அப்படி நடித்தார்களா? என்பது எனக்கு தெரியாது, என்று கூறியுள்ளார்.