‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அன்னக்கொடி படத்தை அடுத்து பாரதிராஜா இரண்டு படங்களை தயாரிக்கிறார். அந்த படங்களை அகத்தியனும் மற்றொரு இயக்குனரும் இயக்குகின்றனர். இதில் அகத்தியன் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தில் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நாயகனாக நடித்த சந்தோஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக அகத்தியனின் மகள் விஜயலட்சுமி நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு கோவையில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து நடந்து வந்தது. ஆனால் தமிழ் சினிமா பணியாளர்களை விட கேரளாவைச் சேர்ந்த பணியாளர்களின் சம்பளம் குறைவு என்பதால் அங்கிருந்து ஆட்களை வரவழைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இந்த விவரம் தமிழ் சினிமாவைச் சேர்ந்த தொழிலாளர் யூனியன்களுக்கு தெரியவர, அங்கு சென்று பிரச்சினை செய்தார்களாம்.
இதையடுத்து, பாரதிராஜா யூனிட்டில் இருந்தவர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்குமிடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டு, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாம். இருப்பினும் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.