ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தனது புதிய படமான மேரி கோம்மிற்காக கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு குத்துசண்டை வீராங்கனை போன்று தனது உடலமைப்பை மாற்றிக் கொண்டுள்ளார், பிரியங்கா சோப்ரா. தற்போது தான் வலிமையுடனும், பலத்துடனும் இருப்பதாகவும், தற்போது யாருடனும் சண்டை போட தன்னால் முடியும் என்றும் அவர் இந்தி பட உலகில் அவர் கூறி வருகிறாராம்.
மேரி கோம் படத்தின் புரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பிரியங்கா சோப்ரா, அந்த படம் பற்றி ஐ.ஏ.என்.எஸ்.,ல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்கா பேசினார். அப்போது அவர் கூறுகையில், மணிப்பூரி வீராங்கனை மேரி கோமை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு இந்த படத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டேன். மிகுந்த கஷ்டமாக இருந்தது. ஆனால் தற்போது அது பயனுள்ளதாக மாறி விட்டது.
இப்போது நான் வலிமையான பெண்ணாக உணர்கிறேன். நான் என் வாழ்வில் விளையாட்டுக்கான பயிற்சி எதையும் மேற்கொண்டதில்லை. அதனால் இது எனக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தது. தற்போது யாராவது என்னை குத்துச்சண்டைக்கு அழைத்தால் கூட, எப்போர்பட்ட குத்துச்சண்டை வீரரையும் வீழ்த்தும் வலிமை என்னிடம் உள்ளது.
இது போன்ற தன்னம்பிக்கையை பெறுவதற்காக ஒவ்வொரு பெண்ணும் தற்காப்பு கலைகளை நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும். உலகம் இன்று இருக்கும் சூழ்நிலையில், பெண்களை பாதுகாக்க சட்டங்கள் மூலம் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தங்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள பெண்கள் இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உங்களுடன் யார் துணைக்கு வந்தாலும், வராவிட்டாலும் அனைத்து ஆபத்துக்களை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அதே சமயம் அதனை நாம் அட்வான்டேஜாக எடுத்துக் கொள்ள கூடாது. இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.