‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் மூலம் அறிமுகமான கேரளத்து வரவு நந்தனா, முதல் படத்திற்காக திருப்பூர் பஞ்சாலையில் ஒரு மாதம் வரை வேலை பார்த்து, பயிற்சி எடுத்து நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. அடுத்து உயிருக்கு உயிராக படத்தில் நடித்தார். அந்தப் படடத்தில் நடித்த இன்னொரு நாயகியான ப்ரித்திதாஸின் கவர்ச்சிக்கு முன்னால் இவரால் தாக்குபிடிக்க முடியவில்லை. அடுத்து பெரிதாக சினிமா வாய்ப்புகளும் இல்லை. ஒரு சாயலில் நடிகை சினேகாவின் தோற்றத்தை கொண்டிருந்தும், நடிக்கும் திறமை இருந்தும், நடிப்புக்காக சிரமங்களை ஏற்றுக் கொள்ளும் தைரியம் இருந்தும் நந்தனாவால் சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை.
இதனால் அவரது பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். தற்போது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹரி என்ற சாப்ட்வேர் என்ஜினீயரை மணம் பேசி முடித்துள்ளனர். வருகிற செப்டம்பர் 6ந் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் நடக்கிறது.
இதுபற்றி நந்தனா கூறியதாவது: இது காதல் திருமணம் அல்ல. கடந்த ஒரு வருடமாக எனது பெற்றோர் எனக்காக தேடி கண்டுபிடித்த மணமகன் ஹரி. சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியாததால் எனக்கு வருத்தம் எதுவும் இல்லை. ஒரு மாற்றத்துக்காக சினிமாவுக்கு வந்தேன் அது செட்டாகவில்லை, விலகிக் கொண்டேன். நடித்தது போதும் என்று நிறுத்திக் கொண்டேன். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றார்.