ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
சமந்தா சினிமாவில் அறிமுகமானது மாஸ்கோவின் காவிரி என்ற தமிழ்ப்படத்தில்தான் அதையடுத்து, விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார். பின்னர் தெலுங்கிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் தெலுங்கில் அதிகமான படங்கள் கிடைத்ததால் அங்கே முன்னணி நடிகையாகி விட்டார்.
இந்நிலையில், ஆந்திராவிலேயே தனது தலைமை அலுவலகத்தை உருவாக்கி விட்டார் சமந்தா. அவரை பட விசயமாக யார் தொடர்பு கொண்டாலும் ஆந்திராவில் இருக்கும் அவரது மேனேஜரிடம்தான் பேச வேண்டுமாம். இதையடுத்து சமந்தாவுக்கு சென்னை பிடிக்கவில்லை என்றொரு செய்தி மீடியாக்களில் பரவியிருக்கிறது.
இதுபற்றி சமந்தா கூறுகையில், நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில்தான். நான் படித்தது சென்னையிலுள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி என்பதால் எனது தோழிகள் அனைவருமே சென்னையில்தான் உள்ளனர். அதனால் சென்னை வந்தால் எனக்கு ரொம்ப ஜாலியாக இருக்கும். அதனால் சென்னை எனக்கு பிடிக்காது என்று செய்தி பரவியிருப்பது வேடிக்கையாக உள்ளது. என்று கூறியுள்ள சமந்தா, சென்னையிலுள்ள எனது தோழிகளை நான் அதிகமாக மிஸ் பண்ணுவதாக நான் அடிக்கடி பீல் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.