'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் |
சமந்தா சினிமாவில் அறிமுகமானது மாஸ்கோவின் காவிரி என்ற தமிழ்ப்படத்தில்தான் அதையடுத்து, விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார். பின்னர் தெலுங்கிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் தெலுங்கில் அதிகமான படங்கள் கிடைத்ததால் அங்கே முன்னணி நடிகையாகி விட்டார்.
இந்நிலையில், ஆந்திராவிலேயே தனது தலைமை அலுவலகத்தை உருவாக்கி விட்டார் சமந்தா. அவரை பட விசயமாக யார் தொடர்பு கொண்டாலும் ஆந்திராவில் இருக்கும் அவரது மேனேஜரிடம்தான் பேச வேண்டுமாம். இதையடுத்து சமந்தாவுக்கு சென்னை பிடிக்கவில்லை என்றொரு செய்தி மீடியாக்களில் பரவியிருக்கிறது.
இதுபற்றி சமந்தா கூறுகையில், நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில்தான். நான் படித்தது சென்னையிலுள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி என்பதால் எனது தோழிகள் அனைவருமே சென்னையில்தான் உள்ளனர். அதனால் சென்னை வந்தால் எனக்கு ரொம்ப ஜாலியாக இருக்கும். அதனால் சென்னை எனக்கு பிடிக்காது என்று செய்தி பரவியிருப்பது வேடிக்கையாக உள்ளது. என்று கூறியுள்ள சமந்தா, சென்னையிலுள்ள எனது தோழிகளை நான் அதிகமாக மிஸ் பண்ணுவதாக நான் அடிக்கடி பீல் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.