‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்தி திரையுலகின், 'லேட்லி' என்று அழைக்கப்படும் சாதனையாளரான நடிகை ஜோரா ஷேகல் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 102. நெஞ்சு வலி காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷேகல், நேற்று(ஜூலை 10ம் தேதி) மாரடைப்பால் காலமானார்.
எப்போதும் புன்னகையுடன் காணப்படுபவர் ஷேகல். 1912-ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி, உத்திர பிரதேசம் மாநிலம், சரான்பூரில் பிறந்தவர், 1935ம் ஆண்டு உதய் ஷங்கரின் நடன குரூப்பில் சேர்ந்தார். தொடர்ந்து பல்வேறு மேடை நாடகங்களில் நடனம் ஆடி வந்தவர், பின்னர் 1946ம் ஆண்டு சினிமாவுக்கும் பிரவேசம் செய்தார். தார்திகீ லால் அவரது முதல் சினிமா. தொடர்ந்து நீச்சா நகர், அப்சர், தி லாங் டூயல், தி குரு, தில் ஷே, வீர் ஷாரா, சீனிகம் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தனது 90வது வயதில், சலோ இஸ்க் லேடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது பேரனாக கோவிந்தா நடித்து இருந்தார். இந்தப்படத்தில் இவர் செய்த பைக் சாகசம் மற்றும் வில்லன்களுடன் சண்டை போடும் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது.
பிரித்விராஜ் கபூர், அசோக் குமார், தேவ் ஆனந்த், அமிதாப் பச்சன், ஷாரூக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பல தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார். சினிமா தவிர்த்து நிறைய டி.வி. சீரியலர்களிலும் நடித்துள்ளார். ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த நடன அமைப்பாளராகவும் இருந்துள்ளார். சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் ஏகப்பட்ட மேடை நாடகளிலும் நடித்துள்ளார், நடனம் ஆடியுள்ளார். கடைசியாக 2007ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலியின் சவாரியா படத்தில் நடித்தார்.
1942ம் ஆண்டு காமேஸ்வர் நாத் ஷேகலை திருமணம் செய்து கொண்டார். ஷேகலுக்கு கிரண், பவன் என்ற இரு மகன்கள் உள்ளனர். கலைத்துறையில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இவை தவிர்த்து காளிதாஸ் சமான், சங்கீத நாடக அகடாமி உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
உடல் தகனம் : ஜோராவின் உடல் டில்லியில் இன்று தகனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கலந்து கொண்டார்.