‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜெயம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜா. இப்படம் வெற்றி பெறவே, ஜெயம் ராஜா என்று அழைக்கப்பட்டவர் தொடர்ந்து உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம் போன்ற படங்களை இயக்கினார். தற்போது தனது தம்பியை வைத்து தனி ஒருவர் என்ற படத்தை இயக்கி வரும் ஜெயம் ராஜா, முதன்முறையாக என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ஜெயம் ராஜா ஜோடியாக மானு நடித்துள்ளார். ஒரே பிரசவத்தில் பிறந்த அதிதி, ஆக்ரித்தி, ஆக்ஷிதி, ஆப்தி என்ற சிறுமிகள் நடித்துள்ளனர். இவர்களை மையப்படுத்தி தான் கதையே நகர்கிறது. காமெடி கலந்த த்ரில்லர் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் குரு ரமேஷ்.
பொதுவாக குழந்தைகளை வைத்து படம் இயக்குவது கஷ்டம் என்பார்கள், ஆனால் இயக்குநர் குரு ரமேஷோ எனக்கு அப்படி தோன்றவில்லை என்கிறார். மேலும் நான்கு சிறுமிகளும் படு சுட்டி என்றும், இவர்கள் நால்வரும் இருந்தால் ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். முன்னதாக தான் இரண்டு குழந்தைகளை மையப்படுத்தி தான் படம் இயக்க இருந்ததாகவும், பின்னர் இந்த குழந்தைகள் பற்றி கேள்விப்பட்டு படத்தில் நடிக்க அவர்களது பெற்றோரிடம் கேட்டபோது, முதலில் அவர்கள் மறுத்தாகவும், பின்னர் கதையின் தன்மையை அவர்களுக்கு எடுத்து சொன்னபோது அவர்கள் புரிந்து கொண்டு நடிக்க சம்மதித்தாகவும் தெரிவித்துள்ளார் குரு ரமேஷ்.
சென்னையை சேர்ந்த அதிதி, ஆக்ரித்தி, ஆக்ஷிதி, ஆப்தி ஆகிய நால்வரும் தற்போது சர்ச் பார்க் கான்வென்ட் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தன. இந்நிலையில், இந்த நான்கு சிறுமிகளும் சில தினங்களுக்கு முன் திமுக., தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.