‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆர்யா என்றாலே ஜாலியான பேர்வழி. ஜாலியான ஜனரஞ்சகமான கதைகளில்தான் நடிப்பார் என்ற இமேஜ் உருவாகி விட்டது. அவரும் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லாமல்தான் இருந்து வந்தார். ஆனால், அவரது நட்பு வட்டாரத்தை சேர்ந்தவர்களோ, சில வளர்ந்து வரும் ஒல்லிக்குச்சி நடிகர்களே கெட்டப்பை மாற்றிக்கொண்டு அதிரடி ஆக்சன் படங்களில் நடிக்கும்போது, இப்படியொரு ஆஜானபாகு உடம்பை வைத்துக்கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடிக்கொண்டிருக்கிறீர்களே என்று அவரது கவனத்தை திசை திருப்பி விட்டனர்.
அதன்பிறகுதான், தன்னைத்தானே உணர ஆரம்பித்தார் ஆர்யா. அதனால், உடனடியாக ஆக்சன் கதைகளாகத் தேடத்தொடங்கியவருக்கு, எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு, மகிழ்திருமேனியின் மீகாமன் ஆகிய படங்கள் கிடைத்தன. அதனால், உடனடியாக அப்படங்களில் கமிட்டாகி தற்போது இடைவிடாத படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார் ஆர்யா.
இதில் மீகாமன் படத்தில் மாலுமியாக நடிக்கிறார். அதனால் தனது கெட்டப்பை முழுசாக மாற்றி நடித்து வரும் ஆர்யா, கதைப்படி ஒரு கட்டத்தில் அதிரடி ஆக்சன் கோதாவிலும் இறங்குகிறார். கடல்வெளியில் நடக்கும் சமூக விரோத செயல்களுக்கு எதிராக இறங்கும் ஆர்யா, மொத்தம் 12 வில்லன்களுடனும் மோதுகிறார். அதில் 7 பேர் முக்கியத்துவம் வாய்ந்த வில்லன்கள்.
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட சினிமாக்களில் புகழ் பெற்று விளங்கும் அந்த மெகா வில்லன்கள் அனைவருடனும் தனித்தனியே ஆர்யாவுக்கு சண்டை காட்சிகளும் உள்ளதாம்.