ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலாவினால் காமெடியனாக அறிமுகப்படுத்தப்பட்ட கருணாஸ் பல படங்களில் நடித்தாலும் அவரது காமெடி நடிப்பு பேசப்பட்டது ஒன்றிரண்டு படங்களில்தான். ஆனாலும் அவருக்கு காமெடி வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வந்தது. கருணாஸுக்கு பட வாய்ப்புகள் வரிசையாய் வந்ததினால் அவருடைய வசதிவாய்ப்புகள் கூடிப்போனதால் வெளிநாட்டு கார், சொந்த பங்களா, சொந்தப்பட தயாரிப்பு, படங்களை வினியோகம் செய்தல் என கருணாஸின் பொருளாதார நிலை உயர்ந்தது.
அதுமட்டுமல்ல, தனக்குப் பின்னால் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதாகவும் நினைத்துக்கொண்டார் கருணாஸ். அந்த நம்பிக்கையின் காரணமாகவோ என்னவோ, தன்னுடைய இனப்பாசத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தவர் ஜாதி அமைப்பு ஒன்றையும் தொடங்கினார். ஜாதி அமைப்பை தொடங்கிய கருணாஸ் அரசியலில் காலூன்றவும் ஆசைப்பட்டார். அதனால் சினிமாவில் கவனம் செலுத்த மறந்தார். எனவே கைவசம் படமே இல்லாமல் இருக்கிறார். கருணாஸைவிட மிகவும் பின்தங்கியிருந்த கஞ்சா கருப்பு கூட கைவசம் இரண்டு படங்கள் வைத்திருக்கிறார். கருணாஸுக்கோ ஒரு படம் கூட கைவசம் இல்லை. படங்கள் கையில் இல்லாததினால் நரைத்த தாடி வைத்துக்கொண்டு ஓல்டு கெட்டப்பில் இருக்கிறார் கருணாஸ்.