‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஒன்பதுல குரு படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் லட்சுமிராய். ஆனால் அப்படம் அவருக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக கோடம்பாக்கமே வேண்டாமென்று பாலிவுட்டுக்கு சென்றார். அங்கு முகாமிட்டபடி தீவிரமான படவேட்டையினையும் முடுக்கி விட்டார்.
ஆனால், லட்சுமிராயின் முயற்சிகள் பெரிதாக ஒன்றும் பலனளிக்கவில்லை. அதனால், தாய்மொழியான கன்னட படங்களில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு இப்போது தான் இயக்கும் அரண்மனை படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரை கொடுத்திருக்கிறார் சுந்தர்.சி., இதே படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா போன்ற லேட்டஸ்ட் நாயகிகள் இருந்தும் தன்னால் ரீச் ஆக முடியும் என்று இப்படத்தை தான் ஏற்றுக்கொண்டதாக சொல்லும் லட்சுமிராய், மீண்டும் கதாநாயகி ஆவதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருந்தார்.
அவரது முயற்சியைப்பார்த்த சில அபிமானிகள், தற்போது கோடம்பாக்கம் புது வரவு நடிகைகளான லட்சுமிமேனன், நஸ்ரியா, ஸ்ரீதிவ்யா, ப்ரியாஆனந்த் ஆகியோரின் கைகளில் சிக்கி விட்டது. அதனால், இனியும் கதாநாயகி வாய்ப்புகளுக்காக முயற்சி எடுப்பது விழுலுக்கு இறைத்த நீர்தான் என்று லட்சுமிராய்க்கு அறிவுறுத்தினர்.
அதனால், இதுவரை மீண்டும் ஹீரோயினியாக நடிப்பேன் என்று தில்லாக பேசி வந்த அவர், தற்போதைய நிலவரங்களை புரிந்து கொண்டு, இப்போது அரண்மனை படத்தில் நடிப்பது போன்று வித்தியாசமான கேரக்டர்கள் மற்றும் அயிட்டம் பாடல்களுக்கு நடனமாடுவது என்று தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளாராம் லட்சுமிராய்.